திருக்கழுக்குன்றம்: சென்னை அருகே கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு, திருக்கழுக்குன்றம் அருகே தண்டரை உள்பட பல்வேறு கிராமங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் நாள்தோறும் ஒரு மினி வேனில் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் வேலை முடிந்து பெண் தொழிலாளர்கள் மினி வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த வேனை ஆமூர் கிராமத்தை சேர்ந்த அகஸ்டின் (34) ஓட்டி வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வேன் தாறுமாறாக ஓடுவதைக் கண்டு பெண்கள் அலறி சத்தம் போட்டபடி வந்தனர்.இதற்கிடையே இந்த வேன் நள்ளிரவு 12.30 மணியளவில் அமிர்தபள்ளம் என்ற இடத்துக்கு வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பெண்கள் அலறி துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து மீட்டனர்.