குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே ஆர்.கொல்லப்பட்டியில் கட்டி முடித்து 10 மாதங்களாகியும் பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.குஜிலியம்பாறை அருகே ஆர்.கொல்லப்பட்டியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானம் செல்லும் சாலையில் பாளையம் பேரூராட்சி சார்பில் 2019-20ம் ஆண்டிற்கான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் நவீன பொது சுகாதார வளாகம் சின்டெக்ஸ் டேங், பைப் லைனுடன் கட்டப்பட்து. ஆனால் இதுவரை கழிப்பறைக்கு தேவையான தண்ணீர், மின்சார வசதி செய்து தரவில்லை. இதனால் கட்டி முடிக்கப்பட்டு 10 மாதங்களாகியும் கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.