திருவள்ளூர்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கொட்டும் மழையிலும் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் எம்.டி.மணிமேகலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.லதா மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ்.உஷாராணி, கே.ஜி.சாந்தி, ஜி.சுகுணா, இணைச் செயலாளர்கள் எஸ்.ஜெயந்தி, ஏ.சாந்தி, எஸ்.பி.பிரவீனா, எஸ்.தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஆர்.லட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சீ.காந்திமதிநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவா மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.