திருவண்ணாமலை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ரூ.60 கோடி வரை அதிகாரிகள் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச்செயலாளர் ஆத்மநாபன்; தமிழக அளவில் குடிநீர் வடிகால் வாரியத்தில் சுமார் 6,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக கூறினார்.