திருத்துறைப்பூண்டி: விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் அளித்த பேட்டி: காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதில் தொடர்ந்து குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. விவசாயிகள் அன்றாடம் அறுவடை செய்யக்கூடிய நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். கிராமங்களில் வீதிகளில் கொட்டி வைத்துள்ள நெல், மழை நீரில் அடித்துச் செல்வதைப் பார்த்து விவசாயிகள் கண்கலங்கி மனமுடைந்து நிற்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.உயர்மட்ட குழுவை அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்தியும் இதுவரையிலும் தமிழக அரசு அனுப்பி வைக்கவில்லை.