அவுரங்காபாத்,:பீகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் மீது, கூட்டத்தில் இருந்தவர்கள் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஒரு அணியாகவும் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைமையில் மெகா கூட்டணியையும், சிராக் தலைமையிலான அணியும் மோதுகின்றன. முன்னாள் முதல்வர் லாலு மகன் தேஜஸ்வி யதவ் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உள்ளார். நேற்று அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.