திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நிலக்கோட்டை அருகே உள்ள மணியக்காரன்பட்டி என்ற ஊரின் அருகே மதுரை- தேனி சாலையில் சற்று முன்பு காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி அதிவேகமாக வந்துகொண்டிருந்ததாகவும், மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே கார் நொறுங்கி காரில் பயணித்த ஒரு ஆன், சிறுவன் உள்பட ஒரு பெண் என காரில் வந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.