திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே 3 மயில்கள் இறந்து கிடந்த சம்பவத்தில் விவசாயியை பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள சூடிபுதூர் பகுதியில் மயில்கள் இறந்து கிடப்பதாக திருவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள விவசாய நிலம் அருகே மூன்று பெண் மயில்கள் இறந்து கிடந்தன.