விருதுநகர்: கொரோனாவை குணப்படுத்த எம்.வி.கசாயம் என்ற புதிய சித்த மருந்தை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்க அரசு அனுமதித்துள்ளது என விருதுநகர் கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சித்த மருந்தான எம்.வி.கசாயம் மூலம் சிகிச்சை அளிக்க அரசு அனுமதித்துள்ளது. எம்.வி.கசாயம் கொரோனாவை குணப்படுத்தும் தன்மை உடையது என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அது வைரஸை மனித உடலில் வளர்ச்சி அடையாமல் தடுக்கும். காய்ச்சல், உடல்வலி, அலர்ஜி, சுவாச நோய்கள், அல்சர், வயிற்றுப்போக்கு, புற்றுநோயை குணப்படுத்தும். ஈரலை காக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.