புதுடெல்லி: சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்க பக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வங்க தேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் ‘ஷேக் ரஸ்ஸல் சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப்’ போட்டி நடந்தது. கொரோனா பீதி காரணமாக இந்தப் போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாடுகளில் இருந்தபடியே காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர். இந்தியா, கொரியா, பூடான் உட்பட 6 நாடுகள் இந்த ‘60 ஷாட்’ போட்டியில் கலந்துக் கொண்டன. பெண்கள் பிரிவில் பங்கேற்ற உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இளவேனில் வாலறிவன்(இந்தியா) 627.5புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார்.