துரைப்பாக்கம்: மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த லியாங்கன் தூங் (23), பெசன்ட்நகரில் உள்ள முடி திருத்தும் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த ஓராண்டுக்கு முன், மோய் (21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, திருவான்மியூர் திடீர் நகரில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. கோபித்துக்கொண்ட மோய், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் சாமுவேல் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் சாமுவேல் வீட்டிற்கு சென்ற லியாங்கன் தூங், மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.