அமிர்தசரஸ்: பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் 16 முறை குடும்பத்தினருடன் போரிட்ட பல்வீந்தர் சிங் சாந்து, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலம், தரண் தரண் மாவட்டத்தை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங் சாந்து (62). இவர் 1990ம் ஆண்டுளில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு எதிராக செயல்பட்டார். இதனால், காலிஸ்தான் தீவிரவாதிகள் இவரை பலமுறை கொல்ல முயன்றனர். இவரது குடும்பத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய 16 தாக்குதல்களை இவர் வீரத்துடன் முறியடித்துள்ளார். கடந்த 1990ல், இவரது குடும்பத்தினர் மீது 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 5 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்திய போது, தனது சகோதரர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து மிகவும் துணிச்சலாக எதிர் கொண்டார். இதனால், இவர் மிகவும் புகழ் பெற்றார்.