ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

ஷார்ஜா: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு பெங்களூரு அணி 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராத் கோலி 48 ரன்கள், பின்ச் 20, படிக்கல் 18, சுந்தர் 13, டுபே 23 டி வில்லியர்ஸ் 2, மோரிஸ் 25, உடனா 10 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் எம் அஸ்வின் 2, முகமது சமி 2, அர்ஷிதீப் சிங் 1, ஜோர்டான் 1 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் உள்ளது. பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது.

Related Stories: