சிவகாசி: சிவகாசி அருகே தச்சகுடி-நிறைமதி சாலை சேதமடைந்திருப்பதால் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சுற்றி ஏராளமான விவசாய கிராமங்களும் உள்ளன. எம்.புதுப்பட்டியை தாய் கிராமமாக கொண்டு 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அதிகபடியாக விவசாயம் மட்டுமே உள்ளது. இந்த விவசாய கிராமங்களில் சாலைகள் பெரும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக தச்சகுடி-நிறைமதி சாலை முற்றிலும் சேதமடைந்து வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.