இளையான்குடி: இளையான்குடி அருகே சேதமடைந்த வீட்டை கட்டி கொடுக்கக்கோரி அதிமுக எம்எல்ஏ நாகராஜன், காலில் விழுந்து பெண் தூய்மை பணியாளர் கதறியழுத சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன் துவக்கி வைத்தார். அப்போது சூராணம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் ஜெயா என்பவர், ‘‘3 நாட்களுக்கு முன் பெய்த கனமழையில் வீடு சேதமடைந்து விட்டது. அரசு அதிகாரிகள் இதுவரை வந்து பார்க்கவில்லை’’ என எம்எல்ஏவிடம் கதறி அழுதார். இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று எம்எல்ஏ நாகராஜன் பார்வையிட்டார்.