கிருஷ்ணகிரி: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்கள்தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி கூறினார்.கிருஷ்ணகிரியில் நேற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி எம்பி அளித்த பேட்டி: அதிமுக இரட்டை தலைமையில் எந்த பிரச்னையும் இல்லை. தற்போது அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதற்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதை தலைவர்கள் முடிவு செய்வார்கள். அந்த குழு தன்னிசையாக செயல்பட முடியாது. அந்த குழு ஆலோசனை வழங்கும் குழுவாக இருக்கும். முழு அதிகாரமும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களிடம் உள்ளது.