மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை பள்ளி கல்வித்துறையில் பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மாவட்ட கல்வி அதிகாரி தரப்பில் ஐ கோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்ய முடிவானது. தனி நீதிபதி உத்தரவை எதிர்க்கும் மனுவை 543 நாட்கள் தாமதமாக மனு செய்வதால், தங்கள் தரப்பு தாமதத்தை ஏற்று அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டுமென மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘2018ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. ஐகோர்ட்டின் பல உத்தரவுகளை பள்ளி கல்வித்துறையில் பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை. பள்ளி கல்வித்துறை தொடர்பான வழக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கலாகிறது.