தாராபுரம், : போதைப்பொருள் கடத்தும் நடிகைகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு அண்மையில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தற்போது விவசாய விளை பொருட்கள் அனைத்திற்கும் ஏற்றுமதி அனுமதி வழங்கினால் மட்டுமே விவசாயிகளை பாதுகாக்க முடியும். உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்தால் விளைபொருட்கள் தேக்கமடையும்.