வருசநாடு: கடமலை- மயிலை ஒன்றிய மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் மேகமலை வருஷநாடு உள்ளிட்ட வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசரடி, இந்திராநகர், வெள்ளிமலை, நொச்சிஒடை பொம்மராஜபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் மாலை 6 மணிக்கு பின்பு வனத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லை என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து தங்களது பணிகளை 5 மணிக்குள் செய்து விட்டு அந்தந்த கிராமங்களுக்கு விரைந்து சென்று வருகின்றனர்.