மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி எம்ஜிஆர் நகர், மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராஜம் (39). மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு தனியார் ரெஸ்டாரன்ட்டில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற சுமதி, மாலை 5 மணியவில் வீட்டுக்கு புறப்பட்டார். பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 பேர், மொபட்டை இடித்து தள்ளிவிட்டு, ராஜம் அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.