எங்களிடம் தரம் உள்ளது: மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா

முழு ஆற்றலை வெளிப்படுத்தி விளையாட முயற்சி செய்து வருகிறோம். அதற்கேற்ப எங்கள் அணியில் தரமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளோம். ஏனென்றால் அவர்கள் திறமையானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இருக்கும் கள சூழ்நிலையங்கள் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. பிட்ச் எப்படியிருக்கும் என்று எங்களுக்கு தெரியாது.

ஆனால் அது வேகங்களுக்கு உதவியாக இருக்கும். அதேபோல் பீல்டிங்கும் புத்திசாலிதனமாக இருந்ததும் நாங்கள் பெருமை கொள்ளும் விஷயமாகும். அதிஅற்புதமான கேட்ச்களையும் பிடிக்க முடியும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. போட்டி தொடங்குவதற்கு முன்பு அவரிடம்(சூரியகுமார்) பேசினேன். அவர் நன்றாக பேட்டிங் செய்தார். ரன் சேகரிக்க அவர் ஆடிய விதம் சரியானது.

Related Stories: