புவனேஷ்வர்: ஒடிசாவில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். ஒடிசாவில் ஆளுநர் மாளிகை அருகே இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் இயங்கி வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் பங்க்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.