காசிப்பூர், :உத்தரபிரதேசத்தில் மூன்று கால்களுடன் பிறந்த குழந்தையை காசிப்பூர் பகுதிமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் தியாரா கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பிரியங்கா தேவி என்பவர் கடந்த செப். 29ம் தேதி படோபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, சில நாட்களுக்கு முன் மூன்று கால்களுடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாவது கால், அந்த குழந்தையின் பிறப்புறுப்புகளுடன் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. கால்களில் தலா ஆறு விரல்கள் உள்ளன. பிறந்த குழந்தை சாதாரணமாக தனது தாயிடம் பால் குடித்தது. இந்த குழந்தையை தெய்வீக அவதாரம் என அந்த கிராம மக்கள் ஆச்சரியமுடன் பார்த்து வருகின்றனர்.