ஐபிஎல் போட்டியின் நடப்புத் தொடர் யுஏஇயில் நடக்கிறது. அங்கு ஐபிஎல் வீரர் ஒருவரை அணுகிய மர்ம ஆசாமி, ‘சூதாட்டத்தில் ஈடுபடுவது, அதனால் வரும் பலன்கள்’ குறித்து மேலாட்டமாக பேசியுள்ளார். அதனால் உஷாரான வீரர், உடனடியாக மர்ம ஆசாமியை விட்டு விலகியுள்ளார். கூடவே தனது அணி நிர்வாகத்தின் மூலம் பிசிசிஐக்கு புகார் அளித்துள்ளார். அதனையடுத்து பிசிசிஐயின் ‘ஊழல் தடுப்பு பிரிவு (ஏசியு) தலைவரும், ராஜஸ்தானின் முன்னாள் டிஜிபியுமான அஜித் சிங் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு உடனடியாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து அஜித் சிங், ‘வீரரை தொடர்பு கொண்ட ஆசாமியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு சிறிது அவகாசம் தேவை’ என்று கூறியுள்ளார்.