செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கான 2020 - 2021ம் கல்வி ஆண்டுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை (PMSS) உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு மாந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.3000, (ரூ.36,000 ஆண்டுக்கு), ஆண் வாரிசுகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 (ரூ.30,000 ஆண்டுக்கு) வழங்கப்படுகிறது. இதற்கு, நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.