டெல்லி : தமிழக வனப்பகுதிகளில் பயிற்சி முகாம்கள் அமைத்து நாச வேலைகளில் ஈடுபட ஐஎஸ் தீவிரவாதிகள் சதி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஜனவரி மாதம் வரை கைது செய்யப்பட்ட 17 ஐஎஸ் தீவிரவாதிகள் மீதும் என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த மெகபூப் பாஷா, கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன், ஆகியோர் இணைந்து என்ற அல் - ஹிந்த் என்ற அமைப்பை உருவாக்கி தீவிரவாத பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை கொலை செய்யவும் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.