கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது காமயகவுண்டன்பட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த பரமசிவம், முன்னாள் எம்பி சக்திவடிவேல், முன்னாள் எம்எல்ஏ பாண்டியராஜ் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட தியாகிகள், சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு இந்த கிராமத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களின் நினைவாக 1985ல் கிராமத்தில் காந்திக்கு கோயில் கட்டி சிலை அமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக தியாகி பாண்டியராஜ் தலைமையில் குழு அமைத்து, அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்புடன் கம்பம் - காமயகவுண்டன்பட்டி சாலையில் மகாத்மா காந்தியடிகளுக்கு கோயில் கட்டி, வெண்கலச்சிலை நிறுவப்பட்டது.