நடிகர் 'சோனு சூட்'டுக்கு ஐ. நா. விருது!.. உங்கள் கடவுள் பணியை தொடருங்கள் என பிரியங்கா சோப்ரா, விஜயகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!!

மும்பை : பாலிவுட் நடிகர் சோனு சூட், கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான சமுதாய பணிகளை செய்தார். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரயில், விமானத்தில் அவர்களுக்கு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது அவரது பணிகளில் முக்கியமானதாக இருந்தது. தற்போது கொரோனாவால் கல்வி வாய்ப்பை இழப்பவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

சோனு சூட்டின் இந்த பணிகளை பாராட்டும் வகையில் ஐநாவின் சர்வதேச வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சிறந்த மனிதநேய செயல்பாட்டாளர் என்ற விருதை அறிவித்துள்ளது. இதையொட்டி அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. நடிகை பிரியங்கா சோப்ரா, ‘சோனுவுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி, அதற்கு தகுதியானவர் அவர். உங்கள் கடவுள் பணியை தொடருங்கள்’ என்று வாழ்த்தி இருக்கிறார்.

இதே போல், நேற்று விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில், ஐ.நாவின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருதைப் பெற்றுள்ள சோனு சூட்டிற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சோனு சூட் அவர்களின் சேவையை பாராட்டும் வகையில்,மணல் கலைஞர் சனத் குமார் சோனு சூட் அவர்களின் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

Related Stories: