திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். இவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருப்பத்தூரில் இதுவரை கொரோனா தொற்றினால் 4702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 86 பேர் கொடிய கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர். மேலும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 583ஆக உள்ளது. பூரண குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 4033 ஆக உள்ளது. இந்த நிலையில் ஆம்பூரில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சண்முகம் என்பவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.