ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்களின் படகில் 300 டன் கிளாத்தி மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மன்னார் வளைகுடா கடலில் காற்றின் வேகம் தணிந்ததால் நேற்று முன்தினம் பாம்பன் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர். நான்கு நாட்களுக்கு மேலாக பலத்த காற்றுடன் கடல் சீற்றத்துடன் இருந்ததால் மீன்பாடு அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பாக்கப்பட்டது. அன்று இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு நேற்று காலை பாம்பன் தெற்குவாடி கடற்கரைக்கு மீனவர்கள் திரும்பினர்.