புதுவையில் ஒரே நாளில் 608 பேருக்கு தொற்று

புதுச்சேரி: சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறியதாவது:  புதுச்சேரியில் நேற்று 5,515 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 608 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 25,489 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19,781 பேர் (77.61 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 2,751 பேர், காரைக்காலில் 489 பேர், ஏனாமில் 98 பேர், மாகேவில் 22 என 3,360 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுவையில் 1,478 பேர், காரைக்காலில் 178 பேர், ஏனாமில் 150 பேர், மாகேவில் 48 பேர் என மொத்தம் 1,854 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,214 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,61,030 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,30,548 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது.

Related Stories: