திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டான கணபதி அக்ரஹாரம், ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில் கடந்த 9 ஆண்டுகளாக சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனை சீரமைத்து தர கோரி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரியும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து முன்னாள் திமுக கவுன்சிலர் ஜானகிராமன் கூறுகையில், ‘இச்சாலையின் நடுவே கழிவுநீர் செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் முழுமையாக சிதிலமடைந்து கம்பிகள் வெளியே நீட்டி கொண்டிருக்கின்றன.