சிவகங்கை: கீழடி அகழாய்வில் ஆமை வடிவ அச்சு, பெண்கள் விளையாடும் வட்டச்சில்லு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில், ரூ. 40 லட்சம் செலவில் 6ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி 19ம் தேதி துவங்கியது. கீழடியில் 18 குழிகளும், கொந்தகையில் 7 குழிகளும், மணலூரில் 5 குழிகளும், அகரத்தில் 12 குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள், உறைகிணறு, உலைகலன், செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் கீழடி 6ம் கட்ட அகழாய்வில் ஆமை வடிவ அச்சு, பெண்கள் விளையாடும் வட்டச்சில்லு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.