நெல்லை: பத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சேரன்மகாதேவி அருகே பத்தமடையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. பத்தமடையில் இருந்து ஆற்றுக்கு செல்லும் பாதையில் கன்னடியன் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் சீரமைக்கப்படாத காரணத்தால் தற்போது பக்கவாட்டு சுவர்கள் உடைந்து, இடிந்து விழும் தருவாயில் உள்ளன.