நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (53). இவர் பணகுடியிலுள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நிஷாந்த் (19) பிளஸ் 2 முடித்துவிட்டு மும்பையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக மும்பையிலிருந்து பெற்றோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிஷாந்த் வந்தார். பின்னர் அவர் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தார்.