நீதிமன்ற வளாகத்தில் பிளேடை விழுங்கிய கைதி: ஆலந்தூரில் பரபரப்பு

ஆலந்தூர்: மாங்காடு லீலாவதி நகரை சேர்ந்தவர் ஜான்பால் (26). புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இவரை வழக்கு விசாரணைக்காக மீனம்பாக்கம் போலீசார் நேற்று ஆலந்தூர் நீதிமன்றம் அழைத்து வந்தனர். அங்கு, மாஜிஸ்திரேட் முன்பு அவரை ஆஜர்படுத்த காத்திருந்தபோது, ஜான்பால் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். பின்னர், பிளேடை விழுங்கி மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, பிளேடை அகற்றும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைதிக்கு, பிளேடு எப்படி கிடைத்தது என விசாரணை நடக்கிறது.

Related Stories: