எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் பஞ்சாயத்தை சேர்ந்த பிதப்புரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டியும் அதனையொட்டி மின்மோட்டார் சுவிட்ச் பெட்டியும் உள்ளது. பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் மின்மோட்டாரை பயன்படுத்தி தொட்டியில் நீரை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மின்மோட்டார் சுவிட்சை தொட்டால் கரண்ட் ஷாக் அடிக்கிறது. இதனால் மின்மோட்டாரை இயக்க அருகில் கிடக்கும் காய்ந்த குச்சியை பயன்படுத்தி மோட்டாரை கிராம மக்கள் போடுகின்றனர்.