டெல்லி: ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்க முடிவு என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இருப்பினும் பாதுகாப்பு சார்ந்த மற்றும் அவசர வேலைகள் தொடர்பான ரயில்வே பணிகள் மட்டும் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் பதிலளித்துள்ளார். ரயில்வே மேம்பாட்டு திட்டங்கள், இந்த நிதியாண்டு முழுவதும் நிறுத்தப்படுவது என்பது ரயில்வே மேம்பாட்டை மட்டுமின்றி வேலை உருவாக்கத்தையும் பாதிக்கும் என்று கூறியுள்ள சு.வெங்கடேசன், இந்தியா மிகப்பெரிய வேலையிழப்பு, வேலையின்மை நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். வேலை உருவாக்கத்தில் அரசு ஈடுபட வேண்டும் என்பதே சரியாக இருக்க முடியும்.