டெல்லி: கல்லூரிகளில் நவம்பர் 1 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். அக்டோபர் 31க்குள் மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. 2020 - 2021ம் ஆண்டிற்கான கல்லூரிகளுக்கான கால அட்டவணையை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். அக்டோபர் 31க்குள் மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் முடிக்கவும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பையும் அவர் தம் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கல்லூரிகள் நவம்பர் 1ம் தேதி தொடங்கிய பிறகு அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தேவையான தேர்வுகள் அனைத்தையும் நடத்தி முடிக்க முடியும் என்ற கால அட்டவணையும் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். முக்கியமாக செமஸ்டர் விடுமுறைகளுக்கான தேதிகளும் இந்த அட்டவணையில் யு.ஜி.சியின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கல்வி அமைச்சகமானது வெளியிட்டிருக்கிறது.