புதுடெல்லி: பீகாரில் ரூ.14,258 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பீகார் மாநிலத்தில் அடுத்த மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பீகாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, 14,258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 350 கி.மீ. தூரத்துக்கான 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி வீடியோகான்பரன்ஸ் மூலமாக நேற்று அடிக்கல் நாட்டினார்.