தேன்கனிக்கோட்டை: கர்நாடக மாநிலம் பன்னரகட்டா தேசிய பூங்காவிலிருந்து, கடந்த வாரம், தளி அருகே பேல்கரை வனப்பகுதி வழியாக 60 யானைகள், ஜவளகிரி அருகே மஞ்சுநாதா வனப்பகுதி வழியாக 80 யானைகள் என தமிழக வனப்பகுதிக்குள் ஊடுருவி உள்ளன. அவற்றை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சோலார் மின்வேலிகள் அருகே புற்களை அகற்றி சீர்செய்யும் பணியையும் முடுக்கி விட்டுள்ளனர்.