சேலம்: சேலம் அருகே ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்து வருகிறது.சேலம் மாவட்டம் மல்லூர் ஆராங்கல்திட்டை சேர்ந்தவர் அய்யண்ணன். இவரது மனைவி லட்சுமி (60). இவர் 30 ஆண்டாக கணவனை பிரிந்து வந்து, ஆராங்கல்திட்டில் தனியாக வசித்து வந்தார். ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆராங்கல்திட்டு அருகேயுள்ள கல்லாங்குத்து என்ற கரட்டுக்கு லட்சுமி ஆடு மேய்க்க சென்றார். ஆனால் நேற்றிரவு நீண்ட நேரமாகியும் லட்சுமி வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், லட்சுமியை தேடி கல்லாங்குத்து கரட்டில் சென்றனர். அங்கு லட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.