திருமலை: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலை சேர்ந்தவர் சுரேஷ், பிரபல ரவுடி. இவர் கடந்த சில நாட்களாக 108 ஆம்புலன்சுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்து வந்தார். புகாரின்பேரில், போலீசார், ரவுடி சுரேசை நேற்று முன்தினம் இரவு கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் காவல் நிலையத்திலிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். இதை போலீசார் கண்டித்தபோது திடீரென உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து தனது கையை கிழித்துக் கொண்டார். கையில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த சுரேசை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச்சென்றனர்.