மும்பையிலிருந்து வெளியேறுவதாக நடிகை கங்கனா ரனாவத் கூறினார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையில் மகாராஷ்டிரா அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறி வந்தார் கங்கனா ரனாவத். இதற்கிடையே அவரது அலுவலக கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன் ஷாருக்கானின் அலுவலகமும் இதுபோல் விதிமுறை மீறி கட்டியதாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நடிகர்களின் கட்டிடமும் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக இருப்பதாகவும் மும்பையில் தலிபான்கள் ஆட்சி நடப்பதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார் கங்கனா. இந்நிலையில் கடந்த 9ம் தேதி அவரது அலுவலகத்தின் ஒரு பகுதி மட்டும் இடிக்கப்பட்டது.