கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக, கொடைக்கானலுக்கு நேற்று குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்தனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இந்த மழை நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் நகர் முழுவதும் கடும் குளிர் காற்று வீசியதுடன், சாலைகளில் ஆங்காங்கு மழைநீர் தேங்கி நின்றது. தொடர்மழை காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நேற்று குறைந்து காணப்பட்டது.