ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, நெசவாளர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட உயர்தொழில்நுட்ப நெசவு பூங்கா திட்டம் பாதியில் நிற்கிறது. இதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் சேலை, வேட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் நெசவாளர்களின் பங்களிப்புடன் ஆண்டிபட்டியில் வைகை உயர்தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.