மனநல மருத்துவ பணியில் இருப்பவர்கள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: மனநல மருத்துவம் தொடர்பான பணிகளில் ஈடுபவர்கள் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மன அழுத்ததில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, தற்கொலை எண்ணங்களில் இருந்து ஒருவரை மீட்டு கொண்டு வருவது உள்ளிட்ட சிகிச்சைகளில் மனநல மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இந்த கொரானா காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் உள்ளவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சை பிரிவுகள் உள்ளது. சென்னையில் கீழ்ப்பாக்கம் மனநல மையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய இடங்களில் மனநல சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதைத்தவிர்த்து 16 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் மன நல சிகிச்சை மையங்கள் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில் மனநல மருத்துவம் தொடர்பான பணிகள் ஈடுபவர்கள் மாநில மன நல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி பயிற்சி பெற்ற மனநல மருத்துவர்கள், மனநல செவிலியர்கள், மனநலம் தொடர்பான பணிகள் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மனநல மருத்துவர்கள் எம்.பிஎல் படிப்பு, செவிலியர்கள் பட்டம் அல்லது பட்டிய படிப்பும், தன்னார்வலர்கள் எம்.பிஎல் சமூக பணி பட்டமும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு முறை புதிவு செய்தால் அது 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த பதிவை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் மாவட்ட அளவில் மன நல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories: