நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை, அதற்காக போராடுகிறோம்: அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல்: நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் மோதிலால் குடும்பத்திற்கு அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மருத்துவம் மட்டும் தான் வாழ்க்கை என மாணவர்கள் இருக்க கூடாது, எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன, அவற்றில் சேரலாம். மேலும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிதியுதவி கொடுப்பது குறித்து ஆலோசனை செய்வதாகவும், நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை, அதற்காக போராடுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: