வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், காட்டு தீ வேகமாக பரவி வரும் நிலையில், மழைக்கான வாய்ப்பு இருப்பதால், காட்டு தீயானது கட்டுக்குள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கலிஃபோர்னியா மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. ஓரேகான், வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் தனித்தனியாக காட்டு தீ ஏற்பட்டுள்ளது. 34 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் உள்ள மரங்கள் தீயில் கருகி சாம்பலாகியதுடன் வனத்தை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் உள்ள வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் 14 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.