நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் மோத உள்ளனர். முதல் அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் பாப்லோ கரினோ புஸ்டாவுடன் (20வது ரேங்க்) மோதிய ஸ்வெரவ் (5வது ரேங்க்) முதல் 2 செட்களையும் 3-6, 2-6 என்ற கணக்கில் இழந்து பின்தங்கினார். இதனால் புஸ்டா அடுத்த செட்டையும் வென்று முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 3 செட்களிலும் சுதாரித்துக் கொண்டு வேகம் காட்டிய ஸ்வெரவ் தொடர்ந்து 6-3, 6-4, 6-3 என கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார். இந்தப்போட்டி 3மணி 23 நிமிடங்கள் நீடித்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு யுஎஸ் ஓபன் பைனலுக்கு முன்னேறிய ஜெர்மனி வீரர் என்ற பெருமையை ஸ்வெரவ் பெற்றுள்ளார். கடைசியாக 1996ல் ஜெர்மனி வீரர் போரிஸ் பெக்கர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
2வது அரையிறுதியில் ரஷ்யாவின் டானில் மெட்வேதவ் (3வது ரேங்க்), ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் (2வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.